search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விசைத்தறி தொழிலாளி பலி"

    பல்லடம் அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் விசைத்தறி தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார்.
    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பெரும்பாளியை சேர்ந்தவர் சீனிவாசன் (45) விசைத்தறி தொழிலாளி. இவர் சுக்கம்பாளையத்தில் உள்ள விசைத்தறி கூடத்தில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு 9 மணியளவில் வேலை முடிந்து மொபட்டில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த கார் சீனிவாசன் மொபட் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சீனிவாசன் சம்பவ இடத்திலே பலியானார். இது குறித்து பல்லடம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சீனிவாசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் பலியான சீனிவாசனுக்கு சுனிதா என்ற மனைவியும், சுருதி, நிவேதிதா ஆகிய 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
    மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த விசைத்தறி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, ராஜாகவுண்டம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் தேவசகாயம் (வயது 65). விசைத்தறி தொழிலாளி. இவர் நேற்று இரவு சொந்த வேலை காரணமாக மொபட்டில் திருச்செங்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். கிரியேறிபட்டி அருகே சென்றபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் தேவசகாயம் ஓட்டிச் சென்ற மொபட் மீது வேகமாக மோதியது. 

    இதில் அவர் தலையில் படுகாயம் அடைந்தார். பொதுமக்கள் அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேவசகாயம் பரிதாபமாக இறந்தார். 

    இது குறித்து திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ×